Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக எம்.பி., ஞான திரவியம் மீது கொலை மிரட்டல் வழக்கு

மே 16, 2020 07:45

திருநெல்வேலி: நெல்லை தொகுதி தி.மு.க., எம்.பி., ஞான திரவியம் மற்றும் அவரது மகன்கள் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை தாலுகா சங்கனாபுரம் பகுதியை சேர்ந்தவர் குமாரி பகவதி. இவர் இன்று( மே 16) காலை தனது கணவர் மற்றும் மகளுடன் நெல்லை மாவட்ட எஸ்.பி.,யை சந்தித்து புகார் அளித்தார்.

அதில், நெல்லை எம்.பி., ஞான திரவியம், எனக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார். எம்.பி., மற்றும் அவரது குடும்பத்தினரால் எனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

இதன் பேரில், பழவூர் போலீசார், ஞானதிரவியம், அவரது 2 மகன்கள் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்